செத்தவர் கண்ணில் ஊறிய கண்ணீரில் எத்தனை வலிகள்.. காய்ந்து போன கண்களில் இருந்து ஊறிவந்த கண்ணீரைக் கண்டவன் நான் இறந்து போனது உயிர்கள் மட்டுமல்ல....ஒரு இனத்தின் அடையாளமும்தான்....... மரண ஓலத்தின் இரைச்சல் களின் ஊடே மனித இரத்தத்தில் குளித்து மறு பிறப்பெடுத்து வந்த...எனது இனத்தின்
ஓங்குவார் கரம் முன் என் சிரம் குனியாது தாங்கிடு பைந் தமிழே உன் மொழி பிறந்ததில் உவகை ஆயிரம் உயிரது என் தமிழே ஓங்குவார் கரம் முன் என் சிரம் குனியாது தாங்கிடு
சிங்கள தலைமைக்கு சிறு வாழ்த்து சிங்களத்தின் சிறு நரிகளே சிறுகச் சிறுகச் சேமித்த தமிழினத்தின் வெற்றியையும் வேர்வையையும் பெருமெடுப்பில் படை நடத்தி பங்கு போட்டு கொண்டவர்களே எங்கள் கண்ணீரின் ஆற்றல்
பாவத்தின் சம்பளத்தில் இது ஒரு பகுதிக் கொடுப்பனவு........ முள்ளிவாய்க்கால் மண்ணுக்குள் உயிரோடு மூச்சடங்கிப்போன. எம் உறவுகளின் ஆன்மா மெல்லச் சிரிக்கிக்கிறது. எல்லையற்ற மகிழ்ச்சியினால் அல்ல இறைவன் விழித்து விட்டான் என்று. வாழ்க்கை ஒரு வட்டம் என்று வகுத்தவனைப் புறந்தள்ளி..எம் தூக்கத்தைக் கெடுத்தவர்கள் தூக்கம் இன்றித்
அழிவின் நினைவிலிருந்து மீழும்வரை உயிரில் உயிரில்லை....... ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒருமுறை மாற்றம் வந்து கொண்டுதான் இருக்கின்றது...இது வரலாறு கொடிய அரசுகள் அழிவதும் கொரோனா போன்ற நோய்கள் வருவதும் ஒன்றும் புதிதல்ல காலமும் இயற்கையும் ஒரு கணக்கு வைத்திருக்கிறது கடல் தரையாவதும் தரை கடலாவதும் இயற்கையின் சட்டவரைவில் எப்பவோ
வீரம் விதை கொண்ட மண் கள்ளத் தோணியர் நாம் சொல்லித் திரிந்த பகை கொல்லத் துடித்ததெம் மண் -அது வீழாப் புகழ் கொண்ட மண் வெல்லத் திறம் கொண்டு வேங்கை வழி சென்று அள்ளிப் பகை
பூவும் புலியாகி போரில் குதித்திட்ட நாடு முன்னொரு காலத்தில் முடி சூடா மன்னர்கள் நாங்கள் ஆற்றல் நிறைந்தோனின் ஆளுமைக்கு அரணாய் நின்றோர்கள் ஏற்றம் மட்டுமே எதிர்கொண்டு ஈழப் போர்த் தேர் ஓட்டி நின்ற
நரபலி கண்ட மண்ணில் நடக்காது நல் வாழ்வு சீரோடு நாம் இருந்து ஈழத் தேரோட்டம் கண்ட நிலம் தலைவனை கொலுவிருத்தி தடைகளை வென்ற நிலம் படை கொண்டு சென்று எம்பகைவனை கொன்ற நிலம் பார்
பொருமிய மனதுடன் புதையுறு குழிகளில் பூக்களை விதை விதைத்தோம் சூழவும் சிங்களம் சுட்டிட துடிக்கையில் யார் கையை தொட்டு நிற்போம் வெங்களம் யாவிலும் வீரத்தை காட்டிய வேழத்தை காத்திடு என்றோம் வாழவே முடியாத நிலையினில்
சாவரினும் தளரோம் யார்வரினும் பணியோம் வெந்துதணியாது வீரநிலம் …! கார்த்திகைமாதம் வேர்த்தறியாக்காலம். மேகமுந்தானை விலக்கி வானத்தாய் பூமிக்குப் பால்கொடுப்பாள். வேர்கள் விருட்சத்துக்கு விருந்தளிக்கும். நீரும் நிலமும் கலந்திளகி பூமிப்பெண் புத்தாடை புனைவாள். ஆயிரம் காணவேண்டும் அதைக்காண. ஊரின்