படுகொலையாளர்பரம்பரை
தலையில்
இடிவிழும் நேரமிது…
இரக்கமின்றி
எங்கள் இனத்தைத்
துடிக்கப் பதைக்க
வதைத்த கொடூரனின்
சிதைக்குத் தீ மூட்டு..
உயிரோடு
நெஞ்சை அறுத்து
இதயம் எடுத்து
கசக்கி எறிந்தவன்
நெஞ்சினில் இடியை
இறக்கு..
அன்று
செந்தமிழ் அழிவை
சிரித்து மகிழ்ந்த
சிங்களம் இன்று
பொங்கி எழுகிறது
தங்கள் வயிற்றுக்காய்
நின்று வேடிக்கை மட்டும்
பார்..
கொடிய
சிங்களம் ஒருபோதும்
திருந்துவது கிடையாது
எங்களினம் இதை நம்பி
ஏமாறக் கூடாது
கொஞ்சநாள் பொறுத்திரு
குடல் நிறைந்ததும்
வஞ்சம் தீர்ப்பார்
வழமை போல..
அகில
உலகத்தின் கொடூரமெல்லாம்
ஒருசேர நடத்திய
கொடூரத்தின் உச்சம்
இவன்….இவர்களுக்குள்
கலகம் நடப்பது
காலத்தின் தேவை நாம்
விலகி நிற்பதே விவேகம்..
இனவெறி
ராஜபக்ச குடும்பம்
ஆட்சி விட்டோ நாட்டைவிட்டோ
போவது அல்ல எமது
விருப்பம்.. உயிர்
கூட்டை விட்டு கொடுரமாய்
போகணும் என்று தானே
கும்பிட்டுக்கொண்டிருக்கிறோம்..
நாம்
அடுத்தவன் சாவில் சந்தோசம்
அடைபவர்களல்ல .. ஆனால்
இவர்கள் கொடுத்த வலி
இந்த சென்மத்தில்
மாறாது..மறக்காது
எமது இனம்
கொடுத்த விலை அதிகம்
இரக்கம் எப்படி வரும்
வயிற்றுப் பசியை விட
இழப்பின் வலிதான் எம்முள்
வியாபித்து நிற்கிறது..
தொடர்ந்து
ஆயிரம் நாட்களுக்கு
மேலாக.. எங்கள்
தாய்குலம் கண்ணீரோடு
வீதியில் நின்று போராடுகிறார்கள்
தொலைந்து போன தம்
சொந்தங்களுக்காக
இது வரை
ஏனென்று கூடக் கேட்கவில்லை
எந்தவொரு சிங்கள மக்களும்
வாய் வருமா இவர்களுக்கு
வாழ்த்துச் சொல்ல..
செய்த
பாவங்களுக்கு பதில்கிடைக்கும்
காலம் நெருங்கி வருகிறது
ஈழம் என்ற கனவோடு
இறந்து போன ..எம்
உறவுகளின் கல்லறையில்
நாளை எழுதி வைப்போம்
நரமாமிசர்கள்
நரகத்துக்கப் போய்க்கொண்டு
இருக்கிறார்கள் என்று..
கவிஞர் ஆவூர்க்குமரன்