உயிர் ஈகம் ஒரு போதும் உறங்காது
உயிர் ஈகம் ஒரு போதும் உறங்காது
கானகம் கடல் தரை ஆறென ஓடும்
மானினம் மயிலோடு வரை தனில் மேயும்
காற்றிடை வெளிகளில் கவலைகள் தீரும்
கவி புனை கைகளில் எழுது கோல் சேரும் .
புதையுறு குழிகளில் பூக்களை விதைக்கும்
புனிதமாய் மண்ணில் உயிர்களை
புதைக்கும்
சிதையுறு வேளையில் விதையுருக் கொள்ளும்
பகையுரு வரும் படை பாடையில் தள்ளும்
வான் வரை வளர் புகழ் தமிழினம் ஆளும்
தேன் நறுமலர்களில் கள்ளேன
ஊறும்
கூன் தனை நிமிர்த்திய குன்றென ஈழம்
குவலயம் தன்னில் குதூகலம் கொள்ளும் …
கவிப்புயல் சரண்