துயர் கழுவ துவக்கு எடுப்போம்
உயிரணைய நிலமிழந்தோம்
உடல் சிதறி உயிரிழந்தோம்
எறிகணையின் சுடு கதிரால்
பசுமை நிறை வயல் இழந்தோம்
வீடிழந்து நாடிழந்து
நடை பிணமாய் நாம் நடந்தோம்
விதி இது என்று எண்ணி விடுதலைக்காய் தவம் கிடந்தோம்
கற்றை வரி கொண்டு காற்றை கையிருத்தி நேற்றை வரை
அரசாண்ட கொற்றத் தலைவனவன்
கோட்டை கொடி இழந்தோம் .
தாண்டு கிடந்த எங்கள் ஆண்ட பரம்பரையின் அடையாளம்
தோண்டித் தொன்மை துலங்க வைத்த
தோள்கள் தனை இழந்தோம்
மாண்டு போகட்டும் மண்ணோடு மண்ணாகி
கூற்றம் என வந்தோன் குடல்கள் தனை உருவி
ஆற்றல் நிறை தலைவன் வீதி வழி
நடை பயில்வோம்
நிலம் மீள நிமிர்வாகி
பலம் எங்கள் உணர்வாகி
பகை சாய்த்த பரம்பரையின்
துயர் கழுவ துவக்கு எடுப்போம் .
…கவிப்புயல் சரண்…