பாவத்தின் சம்பளத்தில் இது ஒரு பகுதிக் கொடுப்பனவு.

In தாயக கவிதைகள்

பாவத்தின் சம்பளத்தில் இது ஒரு
பகுதிக் கொடுப்பனவு……..

முள்ளிவாய்க்கால் மண்ணுக்குள்
உயிரோடு
மூச்சடங்கிப்போன.

எம் உறவுகளின் ஆன்மா
மெல்லச் சிரிக்கிக்கிறது.
எல்லையற்ற மகிழ்ச்சியினால் அல்ல
இறைவன் விழித்து விட்டான்
என்று.

வாழ்க்கை ஒரு வட்டம் என்று
வகுத்தவனைப் புறந்தள்ளி..எம்
தூக்கத்தைக் கெடுத்தவர்கள்
தூக்கம் இன்றித் தவிக்கின்றார்
இப்போ கொழும்பு பற்றி எரிகிறது
கொலையாளி கோத்தபாயாவுக்கு
கொஞ்சம் பயம் வருகிறது.

எங்கள் இருப்பை இல்லாதொழித்த
சிங்களம் இன்று
சிதறிக் கிடக்கிறது
பன்னிரெண்டு ஆண்டுக்கு முன்
பால்சோறு பொங்கி மகிழ்ந்தவர்கள்
கண்களில் தெரிகிறது
பயமும் பசியும்..

இதே
ராஜபக்ச கூடும்பமும் இனவெறி
இராணுவமும்
எமது இனத்தைக் கொன்று
குவித்தபோது
எந்த சிங்கள மக்களுக்கும்
வலிக்கவில்லை..மாறாக
வெற்றிச் சங்கெடுத்து ஊதி
வேடிக்கை பார்த்தார்கள்.. ஆனால்
எமக்கு வலிக்கிறது
அப்பாவிச் சிங்கள மக்களை
நினைக்கும்போது.. ஆனால்
பாவத்துக்கு தண்டனைதான்
பரிகாரம்..

நாட்டைச் சீரழித்த நாதாரிகளால்
இன்று
நம்மினத்துக்கும் துன்பம் தான்
எனினும்
நாம் அனுபவித்தவை இதை விடப்
பல மடங்கு
எந்த வலியையும் வடுக்களையும்
ஏற்கும் பக்குவத்தில்
எங்கள் இனம் வாழப் பழகிவிட்டது
செய்த பாவத்திற்கு
சிங்களமும் கொஞ்சம் செலவழிப்பதில்
என்ன தப்பு இருக்கப் போகிறது?….

மூன்று தேங்காய் க்காக
முச்சக்கர வண்டியையே கொடுத்தோம்
உழவு யந்திரத்தைக் கொடுத்து
ஒரு கிலோ செத்தல் மிளகாய்
வாங்கினோம்.. எதற்காக
சாகப் போகிறோம் எனத் தெரிந்து
ஒருநாளாவது சாப்பிட்டு சாவோம்
என்ற சந்தோசத்தில்
பட்டுப்புடவை எல்லாம் பதுங்கு குழிக்கு
மண் நிரப்பிக்
கட்டிப்போட்டு காலம் கழித்தோம்
பாலுக்கு அழுத பிள்ளைகள் எல்லாம்
பச்சத்தண்ணி மட்டும் குடித்து
நாலு நாளில் செத்துப்போனது
கஞ்சி மட்டும்தான்
தஞ்சம் என்றிருந்தவர்களை
கொஞ்சமும் இரக்கமின்றிக்
கொன்று குவித்த போது
சிங்கள மக்கள் சிரித்துக்கொண்டு தான்
இருந்தனர்.

இறுதியாக
இனப்படு கொலையாளிகளே
உங்களுக்கு
ஒரு வாய்ப்புத் தருகிறோம்
எமது
ஈழதேசத்தை பிரித்து விடுங்கள்
இரண்டு வருடத்திற்குள் கடன்
முழுவதும் அடைத்து .. உங்கள்
மானத்தைக் காப்பாற்றுவது
மட்டுமல்ல
வாழத்தெரியாத உன் இனத்திற்கு
வாழ்வாதாரமும் தருகிறோம்
ஆழத்தெரியாத உனக்கெல்லாம்
அதிகாரம் ஒரு கேடா..

குடும்பம் கூடி கொள்ளையடித்து
நாட்டின்
கோவணத்தை யும் உருவி விட்டு
உலகமெல்லாம் கையேந்தி
ஓடித்திரியும் ஊதாரிப் பயலுகளா
ஒரு
அழகிய நாட்டை
அலங்கோலப் படுத்திய பாவம்
உங்களைக்
கழுவில் ஏற்றியே தீரும்..

கொண்டாடிய உன் இனமே .. இன்று
கொதித்தெழுந்து விட்டது
பாவத்தின் சம்பளத்தில் ..ஒரு
பகுதி தான் இது
மீதி வருவதற்குள் முடிவெடுங்கள்
இரண்டு வழிகள் இருக்கிறது
ஒன்று ஊரை விட்டு ஓடுவது
இல்லையேல் குடும்பத்தோடு
தூக்கு மாட்டிக்கொள்வது
இதில்
இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தால்
எங்கள் இனத்திற்கு
நேரமும் வேலையும் மிச்சம்..

கவிஞர் ஆவூர்க்குமரன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.