நரபலி கண்ட மண்ணில் நடக்காது நல் வாழ்வு
சீரோடு நாம் இருந்து ஈழத் தேரோட்டம்
கண்ட நிலம்
தலைவனை கொலுவிருத்தி தடைகளை வென்ற நிலம்
படை கொண்டு சென்று எம்பகைவனை
கொன்ற நிலம்
பார் போற்றி தமிழ்வாழ்வை தலைதூக்கி
நின்ற நிலம்
வாழ்வித்து நின்ற நிலம் திசை யாவும் போர் முரசம்
வாழ்வழிந்து போன மக்கள் இசை பாடும்
பிணச் சிரசம்
மண் காக்க கருவி தூக்கும் இளசுகளின்
மனக் கவலை
வெண் கொற்ற படை கொண்ட வீரத்தின்
உயிர்ப்பு நிலை
வளம் கொண்ட நல்வாழ்வை வறுமைக்கு தள்ளிய பின்
களம் கண்ட தமிழ் நிலத்தை
கைஏந்த நிறுத்திய பின்
உன் நிலம் மட்டும் செழிக்கும் என்று
நினைத்தே இருந்தாயோ?
நரபலி கண்ட நிலம் காணாது நல்வாழ்வு
உயிர்ப்பலி கொண்ட இனம் போகாது
உயர்வாழ்வு
ஒரு நாளும் உன் நாடு ஓங்கியே
நிற்காது
சிங்கம் கீறிய சீலைக்கொடி சிறந்தே
பறக்காது
திரு நாடு தமிழீழம் திசை எல்லாம் ஓங்கும் வரை
பெரு வீரன் புலிக்கொடி பகை ஏலாம்
நீங்கும் வரை
ஒரு வீரன் தமிழனாய் உலகில்
இருக்கும் வரை
மாவீரன் கனவுகள் மண்ணில் முளைக்கும் வரை
ஒரு நாளும் உன் தேசம் உலகில் நிலைக்காது
கவிப்புயல் சரண்.