போர்வெறிகொண்ட புத்தனின் தேசம் எங்கள் ஊர்புகுந்தழித்தது..... முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது சொல்லி அழுதிடவோ எழுதிடவோ முடியாத பெருந்துயரத்தின் உச்சம் அது ஓரினத்தின் உயிரெடுத்து உதிரம் குடிப்பதற்காய் பேரினவாத பேய்கள் நடாத்தி முடித்த கோரத்தாண்டவம்........ நந்திக்கடல் சிவந்த நீரால் பொங்கி வழிந்தது சிங்களம் அதில் படகேறி சிரித்து மகிழ்ந்தது எங்கள் இனத்தின்
உயிர் ஈகம் ஒரு போதும் உறங்காது கானகம் கடல் தரை ஆறென ஓடும் மானினம் மயிலோடு வரை தனில் மேயும் காற்றிடை வெளிகளில் கவலைகள் தீரும் கவி புனை கைகளில் எழுது
துயர் கழுவ துவக்கு எடுப்போம் உயிரணைய நிலமிழந்தோம் உடல் சிதறி உயிரிழந்தோம் எறிகணையின் சுடு கதிரால் பசுமை நிறை வயல் இழந்தோம் வீடிழந்து நாடிழந்து நடை பிணமாய் நாம் நடந்தோம் விதி இது என்று எண்ணி
செத்தவர் கண்ணில் ஊறிய கண்ணீரில் எத்தனை வலிகள்.. காய்ந்து போன கண்களில் இருந்து ஊறிவந்த கண்ணீரைக் கண்டவன் நான் இறந்து போனது உயிர்கள் மட்டுமல்ல....ஒரு இனத்தின் அடையாளமும்தான்....... மரண ஓலத்தின் இரைச்சல் களின் ஊடே மனித இரத்தத்தில் குளித்து மறு பிறப்பெடுத்து வந்த...எனது இனத்தின்
அழிவின் நினைவிலிருந்து மீழும்வரை உயிரில் உயிரில்லை....... ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒருமுறை மாற்றம் வந்து கொண்டுதான் இருக்கின்றது...இது வரலாறு கொடிய அரசுகள் அழிவதும் கொரோனா போன்ற நோய்கள் வருவதும் ஒன்றும் புதிதல்ல காலமும் இயற்கையும் ஒரு கணக்கு வைத்திருக்கிறது கடல் தரையாவதும் தரை கடலாவதும் இயற்கையின் சட்டவரைவில் எப்பவோ
மன்னியுங்கள் முக்கோடி மூத்தகுடி முத்மிழன் வாழ்ந்தகுடி முள்ளிவாய்க்கால் பரப்பிலே குண்டுதுளைத்துக் கிடந்தானே (more…)
இனச்சுடர் எழுக! வான்தரும் சுடர்போல் வண்டமிழ் இனத்தார் மனங்களில் ஒளிவிடும் சுடரே! தீந்தமிழ் என்னும் தென்னவள் வயிற்றில் திடமுள மழலையாய்ப் பிறந்தாய்! மீன்புலி வில்லை ஏந்திய வேந்தர் அரியணைக் கட்டிலில் தவழ்ந்தாய்! பைந்தமிழ் மக்கள் தோள்களில்
வலிசுமந்த வைகாசி மே மாத வேளையிலே மெய்சிலிர்த்து ஓடுகிறதே ஆறாக எம் இருவழி நீர். கோரப்பசி எடுக்க கொடுங்கோல் ஆட்சி தொடுத்து ரத்த கறை படிந்த ரதமேறி ஈழ நிலம் மேய்ந்த சிங்களம். அவலங்கள் நாம் சுமந்து அவையங்கள்
இன்றோர் உறுதியேற்போம்! முள்ளிவாய்க்கால்! அல்லி வாய்க்கால் பரப்பெங்கும் அழகாய்ப் பூத்து மணக்குமிடம், துள்ளி வாய்க்கால் நீரலையைச் சுற்றி மீன்கள் பாயுமிடம், "முள்ளி வாய்க்கால்" என்னுமிடம் முடிவில் தமிழர் இனத்துக்கே "கொள்ளி வாய்க்கால்" ஆனதென்று கூறிக் கூறி அழுவதென்னே! வேரில் நீராம்
உச்சம் தொட்ட வலியின் ............முனகலும்................... ..முள்ளிவாய்ய்க்கால் கஞ்சி..யும்... ================================== ஆண்டுகள் உருண்டு l நகரும் போதும் நிற்கவில்லை கண்ணீர் . உச்சம் தொட்ட முனகலின் வலிகள் மாத்தளனும் புதைந்திட போக நந்திக்கடலோரம் நடந்த மனிதவேட்டையது / அவலத்தின் சாட்சியாய் உயிரின் பிடிப்பாய் இருந்த இறுதியுணவாக கைகொடுத்த கஞ்சி