வலிசுமந்த வைகாசி
மே மாத வேளையிலே
மெய்சிலிர்த்து ஓடுகிறதே
ஆறாக எம் இருவழி நீர்.
கோரப்பசி எடுக்க
கொடுங்கோல் ஆட்சி தொடுத்து
ரத்த கறை படிந்த ரதமேறி
ஈழ நிலம் மேய்ந்த சிங்களம்.
அவலங்கள் நாம் சுமந்து
அவையங்கள் தனை இழந்து
அலறி நாங்கள் ஓடினோம்.
அண்ணாந்தும் பார்த்தோமே
அயல் நாடே..! பாரதமே
பாதகம் பார்த்தாயே நீயும்.
பூவோடு பிஞ்சுமாய்
தாயோடு குஞ்சுமாய்
மாடோடு சேர்ந்த கண்டுமாய்
நாங்களும் தானே சிதைந்தோம்
இல்லை இல்லை எமை
சிதைத்தானே பகைவன்.
உலகே…!
உலகே….! அன்று
உயிர் போன வேளையிலும்
உதவாத உன் கரங்கள்
இன்றும் மௌனம் தானே கொள்ளுது.
ஈராறு ஆண்டுகள் கடந்தும்
இழகவில்லையா உங்கள் இதயம்
எங்கள் ஓலங்கள் கேட்கவில்லையா?
சாவு விழமுன்னே – நீங்கள்
வேவு பார்த்து போறீறே வேறு தேசம் .
இங்கு சாவு விழுந்தும்
வேவு அல்ல
காவு கொள்ளக்கூட எவரும் வரவில்லையே.
முள்ளி வாய்க்கால்
எங்கள் மூச்சின் இறுதிக்கணம்
முடங்கி முடங்கி
முதுகெலும்பு உடைந்து
முட்டி மோதி தட்டித் தடுமாறி
தரை தட்டிக் கொண்டதே
எங்கள் காப்பரண்களும் கப்பல்களும்.
ஐநா வரும்
அயல் நாடு தலையிடுமென
உண்ணாமல் அண்ணாந்து பார்த்து
அநாதையாகித்தானே போனோம்.
அன்றல்ல இன்றும்தானே.
வஞ்சகம் வாசல் வந்து தட்டும்போது
வாழ்விழந்து ஓடும் வம்சமல்ல நாம்.
அஞ்சாது போர் புரியும்
நெஞ்சார்ந்த வேங்கைகள் நாம்.
முடிவுகள் கிட்டும்
முனைப்புகள் தொடரும்
தானைத் தலைவன் வழி பிறக்கும்
உலகே நீ உற்றுப் பார்ப்பாய்.
உறங்காது தமிழினம்
தலை நிமிர்வோம்
தரணியில் வாழ்வோம்
ஐநாவில் எம் கொடியும்
நிலையாக அசையும்
நாமும் சுதந்திர காற்றை சுவாசிப்போம்.
றொபின்சியா
18.05.2021