உச்சம் தொட்ட வலியின்
…………முனகலும்……………….
..முள்ளிவாய்ய்க்கால் கஞ்சி..யும்…
==================================
ஆண்டுகள் உருண்டு l
நகரும் போதும்
நிற்கவில்லை கண்ணீர் .
உச்சம் தொட்ட
முனகலின் வலிகள்
மாத்தளனும் புதைந்திட
போக நந்திக்கடலோரம்
நடந்த மனிதவேட்டையது /
அவலத்தின் சாட்சியாய்
உயிரின் பிடிப்பாய்
இருந்த இறுதியுணவாக
கைகொடுத்த கஞ்சி /
அள்ளிக் கொடுத்து
விருந்துண்ண உபசரித்த
வன்னி மண்ணதில்
கிள்ளி ஊற்றிட /
இறுதிக்கணம் கஞ்சியுமற்று
குருதி மண்ணை
உண்டு குருதியோடிய
கடல்நீரைப் பருகி /
இரத்ததில் சிவந்த
மண்ணுக்குள் புதைந்த
அதியுச்ச வலிகளின்
அலறல்கள் கத்தல்கள்/
உயிரின் வதையின்
முனகல்கள் ரீங்காரமாய்
செவிப்பறையை கிழிக்கிறதே
உணர்வுகள் கொந்தளித்து /
இயக்கமின்றி தளர்கிறதே
மாதங்கள் ஒவ்வொன்றும்
மகத்துவாய் பிறக்கும்
மாதத்தில் இவள் மே/
மகத்துவத்திலும் எத்திக்கிலும்
இவள் கதை தான்
ஆமாம் மேமாதம்
என்றால் கறுப்பு./
நாடு நாடாய் நாம்
நடுவீதியில் புரண்டும்
நாதியற்றுதான் போனோம்
மறந்துபோக இவை /
புனைவுகள் அல்ல
புதைக்கப்பட்ட நிசத்தின்
வாழ்வியல் நிதர்சனங்கள்
மறந்துதான் போகுமோ?
ஊழிக்கூத்தும் கோர
உயிர்வதையும் ..மனித
உணர்வோடு சதையும்
உயிரும் உள்ளவரை
தமிழினத்தின் வரலாற்றில்
குருதிப் பக்கங்கள்
தங்கத் தலைவனின்
படையணி மீண்டும் /
வந்திடாது கருத்தோடு
கவனித்து களையெடுக்கிறான்
எதிரிக்கு இருக்கும்
நம்பிக்கை கூட /
நம்மில் இல்லையே
பலருக்கு ஏன்?
இந்த மாற்றம்
எம்மினமே விழிப்பாயா ?
மீண்டும் தொடங்குகிறான்
உயிர் அறுவடையை
மனிதா இதை
நீ உணர்ந்தால்./
உன் பங்கு என்ன
என்று உயிர்ப்போடு
உறுதி கொள் இந்த
கறுப்பு மாதமதில் /
கருவறுப்பின் உச்சம்
தொட்ட ஏழாம் நாளின்
வலிசுமந்த நினைவோடு
என் இதய வீரவணக்கங்கள்
இவள்
தமிழ்மகள் பரா
17.05.21