அழிவில்லா தலைமகனுக்கு அகவைத்திருநாள் வாழ்த்துக்கள் …..
அகவை கூடும் போது உனை வாழ்த்த மொழிகள் வரிகள் தேடுது அண்ணா ..
ஆண்டுகள் கடந்தாலும் உனைக் காண
விழிகளுக்குள் மனம் ஏங்குது அண்ணா….
தேசம் தந்த காலத்தின் தலைவா ..
கேட்காதோ மீண்டும் உன் குரல் …??
பார்க்காதோ என் விழிகள் உனை …??
உயிர் துடிக்கும் ஓசையிலே
உன் வரவை எதிர் பார்க்கிறேன் ..
விரைந்து வா அண்ணா ….
விடியல் வரும் நாளை எண்ணி
காலம் உன் கட்டளைக்காய் காத்திருக்கு ..
தேசம் உன் வரவுக்காய் விழித்திருக்கு …
கார்த்திகையில் மலர்ந்தவனே …
பார்வதி பெற்றுத் தந்த புத்திரனே ..
உனை தேடி அலைகின்றோம் அண்ணா
விழிகள் நனைகிறது விடியல் கிடைக்காது
கேட்பாரற்று தேசம் நின்மதி
இழந்து கிடக்கிறது ….
எம் உணர்வுகள் காற்றோடு கலந்து
உன் மனதை தொடவில்லையா அண்ணா
மௌனம் போதும் அண்ணா
வந்துவிடு மீண்டும் எமக்காய் ..
தேசம் உயிர்பெறும் உன்னால் …
உயிரான என் அண்ணனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்…