தமிழுக்கு அகவை வாழ்த்து
இந்த மண் தன்னில் வீசும்
சந்தன காற்றே வாழி
வித்தைகள் அறிந்தே வெல்லும்
வித்தக காற்றே வாழி
வாயினால் வீரம் பேசி
வந்த நம் பகையை மோதி
போரிலே விந்தை செய்த
விறல் மிகு வேந்தே வாழி
தயங்கிய தமிழன் தலையை
தரணியில் நிமிரச் செய்து
திசைகளை அதிரச் செய்த
தீரனெம் தலைவா வாழி
கண்களை காட்டி தமிழன்
கட்டளை ஒன்று இட்டால்
மண்ணோடு பகையை மாய்க்கும்
விண்ணனேம் தலைவா வாழி
பொங்கிடும் வீரம் கொண்டு
புலியணி தன்னை காத்து
புயலென மாற்றி வைத்த
பெருமைகொள் தலைவாவாழி
வல்லமை நிமிரச் செய்யும்
சங்கென எங்கள் தேசம்
மங்கிடா புகழ் பரப்பி
மறை பொருள் ஆகிவிட்ட
தங்கமே வாழி வாழி……..
……கவிப்புயல் சரண்…….