உலகை புரட்டிப் போட்ட ஓர் தமிழ் ஆளுமை

In தலைவர் கவிதைகள், தாயக கவிதைகள்

உலகை புரட்டிப் போட்ட ஓர் தமிழ் ஆளுமை

 

ஈழத்து பெருவெளியில் மட்டும் அல்ல உலகத்து சம வெளியில் எல்லாம் உரைக்கின்ற தமிழ்ப் பெயரே
பிரபாகரன்…

எங்கிருந்து வந்த வல்லமை
எதிலிருந்து பெற்ற ஆளுமை
எப்படி வளர்ந்து கொண்ட போர்க்குணம்

உலகை புரட்டிப் போட்ட ஓர் தமிழ்
ஆளுமை
ஈழ வரலாற்று மாற்றத்துக்கான ஓர் போராற்றல்
காலத்தை கடந்தும் களம் கண்ட கரிகாலப் பெருவீரன்
சிகரம் தொட்டுச் சிரித்த சீறுபுலிச் செழுமறவன்

சினந்தெழுந்து பகை வென்ற சேனைப்படை வீரன்
செந்தமிழின் சினம்கொள் செஞ்சுவர்த் தூண்
அஞ்சுதல் தனை மறந்த ஆயிரத்துப் பெருங்
காளை
கெஞ்சுதல் அகற்றி வென்ற பேரீழப் புலியூரான்

ஆற்றல் மிகுதி கொண்ட வேழத்திறல்
வேந்தன்
கனவுக்கு உயிர் தந்த காவியத்து
தமிழோவியம்
நினைவுக்குள் நிமிர்கின்ற நித்தியத்து
பெருவீரம்

பெண்மைக்கு களம் கொடுத்த பேராற்றல் தாய்ப் புலியே
ஆண்மைக்கு அழகுந்தன் களம் கொண்ட சிறு வயதே
காவியத்தில் எழுதாத பாட்டுடைப் புலி வேந்தா
ஓவியத்தில் தீட்டாத ஒற்றுமையின் விழி நெருப்பே

அழித்தாலும் அழியாது வேரூன்றும் பெரு
மரமே
ஒழித்தாலும் ஒழியாத ஓர்மத்தின் தீப்
பிளம்பே
சிதைத்தாலும் சிதையாத செந்தமிழின் ஒளி
நெருப்பே
எரித்தாலும் ஏரியாத எரிதணலின் பெரும்
பொறியே.

கந்தகம் கட்டி நின்ற காவலுக்கு
களம் தந்த கரிகாலனே .
வெந்த எம் மனம் வந்து குளிர் தந்த ஒளிநிலவே .
செந்தணல் மண் வந்து விலங்கொடித்த
செழு மறவா
எந்தமிழ் மொழி கொண்டு எனையாளும்
செந்தமிழா…

வாழ்க நீ நூறாண்டு
இனிய அகவை நாள் வாழ்த்துக்கள் அண்ணா…

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.