கல்லறையில் வாழும் தியாகச் செம்மல்கள்…!
எமக்கென்று ஒரு தேசம்.
அதில் நிறைந்த கனவுகள்.
கனவுகள் கனவுகளாகவே
இன்னும்….
கல்லறையில் வாழும்
தியாகச் செம்மல்கள்
எற்றி வைத்த
நம்பிக்கை நெருப்பு மட்டும்
இன்னும் அணையாமல்
நெஞ்சுக்குள்….
எங்கள் விடியலுக்காய்
உங்கள் விழிகளை மூடிய
நம் தேசத்தின் காவலரே,
நாளைய விடியலில்
உங்கள் கனவுகள் மலரும்…..
உங்கள் வித்துடல்கள்
விருட்சமாய் பெரு வெளிச்சமாய்
வளரும்….
ஒரு நாள் உலக வரைபடத்தில்,
தமிழ் ஈழ தேசம் தெரியும்..
நீங்கள் சிந்திய குருதியில்
சிவந்த இம் மண்ணில்
சிரிக்கும் காந்தள் மலர்கள்….
சுதந்திரக் காற்றில்
எங்கள் மண்ணும்,
நிச்சயம் ஒருநாள்
திளைக்கும்…………………….
-சங்கரி சிவகணேசன்