தாய் நிகர் தலைமைக்கு அகவை வாழ்த்து
மரணம் கலைத்து மண்ணில் ஜனனம் பல கொண்டவன்
உறக்கம் தொலைத்து விண்ணில்
உயரம் பல கண்டவன்
ஆழப் பெரும் கடலில்
வாழக் குறி சொன்னவன்
வீழாத் தமிழ் வீரத்தை
தோளில் வெல்ல சுமக்கின்றவன்
பாடும் பறவைக்கு எல்லாம்
பறக்கும் நிலை தந்தவன்
ஓடும் நதிக்கு எல்லாம்
ஓட வழி சொன்னவன்
கூட்டின் கதவுடைத்து கிளியை
வானம் உலவ செய்தோன்
காற்றில் உலவி நின்ற தமிழ்
மானம் காத்து நின்றோன்.
ஆற்றல் உடைய அண்ணன்-அவன்
தோற்றம் பிறந்த நாளில்
சீற்றம் மிககொண்டு பகைக்கு
கூற்றம் ஆகி நிற்க வாழ்த்துவோம்
பல்லாண்டு….
கவிப்புயல் சரண்