ஈழத்துச் சூரியனே வா……….
காலைச் சூரியன்
ஔிபட்டுத் தெறிக்கின்ற கதிரவன்
இமைகள் விழிக்கின்ற பொழுது
இதயங்களை உயிர்ப்பிக்கும் உயிரவன்
உலகினில் ஔிதரும் தீபமே
எமக்கு என்று ஔி தருவாயோ!
ஏனெனில் எம் இரவுகள்
இன்னும் விடியவில்லை
நீ போன நந்திக்கரையோரம்
உன் காலடி ஓசையை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
உன் மீது கொண்ட நம்பிக்கை
என்றும் போல் இன்றும் மாறாமல்
நீ மீண்டும் வந்து
எங்கள் துயர் துடைப்பாய்
என்ற ஓயாத நம்பிக்கையில்
வாழ்கிறோம் தலைவனே
வந்துவிடு ஈழத்துச் சூரியனே
ஒவ்வொரு முடிவிலும்
ஒரு தொடக்கமுண்டு
உன் வருகையிலும் ஒரு……..
இனிய உதயம் உண்டு
எழுந்து வா தலைவா
எம் இனம் காக்க
மீண்டும் வா ஈழத்துச் சூரியனே.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.