பிரபாகரனியம்!.
பார்வதி பெற்றெடுத்த
வேலுப்பிள்ளை எனும் தமிழிலே
மூழ்கி எழுந்த வரிப்புலியாய்
சங்ககால வீரத்தை கலியுகத்தில் தந்து
நேர்மை எனும் வழியில் சென்று
நீதி நெறியால் வாழ்வை கடந்து
உலகிற்கு புது ஒழுக்க நெறி தந்து
உலக வரலாற்றில் இமயமாய் உயர்ந்து
மாற்றான் தமிழனை வதைக்க
அவன் மீது போரினை தொடுத்து
தமிழ்மொழியை அரனாய் காத்து
காலன் தந்த கரிகாலனாய்
செந்தமிழ் காத்த
தமிழ்த் தேசிய தலைவனாய்
புகழால் உச்சம் பெற்ற போதும்
அடக்கம் அதனால் வென்று
தமிழின் இயங்கு சக்தியாய்
உயர்ந்து நிற்கின்றான்
பிரபாகரனியமாய்…
ஈழம் புகழ் மாறன்.