கரிகாலனாய் காப்பவனே..!
புலிவரி தரித்தவனே துரோகிகளை யெரித்தவனே
காலனை வென்றவனே!
செந்தமிழ் வரித்தவனே வல்வையில் உதித்தவனே
எதிரிகோட்டை எரித்தவனே!
குப்பி தரித்தவனே வல்லாதிக்கத்தை தகர்த்தவனே
சிந்தையில் அமர்ந்தவனே!
கருநிறம் படைத்தவனே கரும்புலி தரித்தவனே
விந்தைகள் புரிந்தவனே!
தன்னுரு மறைத்தவனே தமிழ்திசை தவத்தவனே
எதிரியும் துதிப்பவனே!
தமிழன்னையை சுமந்தவனே புதுநெறி பகிர்ந்தவனே
புதுச்சரித்தரம் படைத்தவனே!
போரில் களிப்பவனே சுதந்திரம் அளிப்பவனே
விடுதலை கொடுப்பவனே!
நெஞ்சினில் இருப்பவனே துன்பங்கள் அழிப்பவனே
கரிகாலனாய் காப்பவனே!
ஈழம் புகழ் மாறன்