தமிழினத்தின் தலைவனை தேடும் தமிழ்மகனின் தவிப்பு..! எல்லாள மன்னவனே எங்கள் குலசூரியனே-நீ இல்லாத சோகம் எம்மை வாட்டுதய்யா-தாய் இல்லாத குழந்தை தனியாத் தவிக்குதய்யா
முல்லையில் நீ இருந்த
முப்படையும் நீ வளர்த்த
அத்தனையும் உன்புகழ்
சொல்லுதய்யா…
அழகா உன்சிரிப்பு
அடிக்கடி வந்து கொல்லுதய்யா
காத்தோட உன்வாசம்
காடெல்லாம் உன் பாசம்
ஊத்தாட்டம் உன் நினைப்பு
ஊறுதய்யா
ஊரெங்கும் உனைக்காண ஏங்குதய்யா
உத்தமரே ஊரைகாக்க வாருமய்யா.
கடல்தாண்டி போனாயோ
கடலாகிப்போனாயோ
தலைவா நீ திரும்பி வரனும்
தமிழர் நாட்டுக்கு.
மறைந்து நீ வாழ்ந்தாலும்
மண்ணோடு போனாலும்
தலைவா நீ பெருமை
உலகத்தமிழுக்கு
தலமை ஒன்று இல்லாம
சரிஞ்சது எங்கட ஆட்சி
நீயே எங்க ராசா
வா வா களத்துக்கு
தாய்மண்ணை காக்கும்
கடவுள் நீயய்யா
தாங்காம நீயும் போனா
தப்பய்யா…….
காட்டுக்குள் வாழ்ந்தாலும்
களத்தில வீழ்ந்தாலும்
கம்பீரம் குறைஞ்சிடாத
நெருப்பு நீ
அய்யோன்னு போனாலும்
ஆகாசம் போனாலும்
தண்ணீரை குளத்தில்
சேர்க்கும் வரப்பு நீ.
உரிமை கேட்கிற ஆள
உதைச்சு தள்ளிற ஊர
கைய கால வெட்டிவீசும்
கரிகாலன் நீ
காடையர் உன்னை கண்டா
ஓடாரோ………………………..
காப்பாத்தும் தெய்வம்
வந்து சேராயோ……………
த.யாளன்&கவிஞர் யுகபாரதியின்
சில வரிகளும்