தடைகளை தாண்டியும்
மாவீரரை நினைவுகூருவோம்…………
எங்கள் தாய்நிலத்தில்
எம் வீரரை நினைவுகூர
தடை போட நீயார்
சிங்களத்து பெருச்சாளியே
கேட்டுக்கொள்
மாவீரர் துயிலும்
கருவறைக் கோயிலை இடித்தாய்
நினைவுத் தடங்களை அழித்தாய்
இன்று,
எங்கள் செல்வங்களை
நினைவுகூற
தடையா
ஏன்!
மாவீரர் கல்லறை மட்டுமல்ல
அவர் நினைவுகளைத் தொழும்
காரத்திகை இருபத்தேழும்
உங்கள் அத்திவாரத்தை
ஆட்டம்காண செய்கிறது
இது எங்கள் நிலம்
எம் இனம் காத்த கண்மணிகளை
கண்ணுள் வைத்துத் தொழ
எமக்கு உரிமையுண்டு
எத்தடை வரினும்
அத்தனையும் தாண்டி
கார்திகை நாளில்
வீரதீபம் ஏற்றுவோம்
வாருங்கள் தமிழீழ மக்கா.
எழுத்துருவாக்கம் : நாகதேவன் தமிழீழம்.