துயில் கொள்ளும் மாவீரரை துதிப்போமே
முடியுமென நினைத்து
வெடிகுண்டுடனே வாழ்ந்தீர்-ஈழம்
விடியுமென நினைத்தே-மண்
மடியினிலே வீழ்ந்தீர்
கொடிய சிங்களன் படையுடனே
புலியெனவே பாய்ந்தீர்-உயிர்
மடியும்வரை மானத்துடன் அடிபணியாது வீழ்ந்தீர்.
நெடிய பகை நேரில் நின்று
வலிய போர் வென்றீர் இடியெனவே எதிரிகளின் இருப்பிடத்தில் பாய்ந்தீர்.
கடியவர்கள் காவலிலும்
கந்தகமாய் வீழ்ந்தீர்
மடியும்வரை மண்டியிடோமென
மாவீரராயானீர்
துயில் கொள்ளும் மாவீரரை துதிப்போமே
துதிப்போமே-அவர் உயிர்புக்கு தமிழீழம்
மலர்ந்தாக உழைப்போமே.
த.யாளன்