நீங்களின்றி யார்? எங்கள் துயர் துடைப்பார்………..
தமிழினத்தின் பெருந்தலைவா
தமிழன் வீரத்தை முரசறைந்த வீரத்தலைவா
தாய்போல எமயணைத்து
தாழாத துயர் துடைத்து
தரணியில் எமக்காய்
புதுவழி வகுத்தவனே
நீயின்றி யாரைய்யா
எங்களுகக்குத் தலைவன்
நீ தானே வேண்டும்
வந்துவிடு தலைவா
பட்ட துயர் அகழ
பாரில் எம் தலைகள் நிமிர
கண்ணீரின் கோடுகள்
காணாமல் போய்விட
நீ வர வேண்டும் தலைவா
எம் தோள்களுக்கு பலம் சேர்க்க
மீண்டும் வந்துவிடு தலைவா
எம் வாசல்வரை வந்து
ஆணவக் களிப்பில் ஆட்டம் போடும்
வஞ்சகர் சேனையை
பாடையிலே அனுப்பிட
வாள் கொண்டே பகைவனின்
தலைகளை கொய்திட
பெரும் புயலாகி பெரும் படையோடு
நீ வரவேண்டும் தலைவா
எம் சுடுகுழலுக்கு பலம் ஊட்ட
நீ வர வேண்டும் தலைவா
வையகம் நடுநடுங்கிட
மானிடம் வியந்திட
நானிலம் எங்ஙனும்
தமிழன் புகழ் ஓங்கிட
முப்படையுடன் உயிர்க்கொடையும் கொண்டே
தாய்நிலம் மீட்க்க
பெரும் தீப்பிளம்பாகி வா தலைவா
நீயின்றி எங்களுக்கு
யாரைய்யா துணை நிற்ப்பார்
எங்கள் கனவுகள் நனவாக
நீ வரவேண்டும் தலைவா
நாம் வீழ்ந்த நிலத்தில்
உன் வருகைக்காய் காத்திருக்கிறோம்
வந்துவிடு தலைவா.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.