கார்த்தீகையின் ஈரம்……….
கார்த்திகைமாதம் மலர்ந்திடும் நாளில்
தாய்நிலமெங்கும் கார்த்திகைப் பூக்கள் மலர்ந்திடும்
காந்திகை மைந்தரின் முகங்களை
சுமந்து நிற்க்கும்
இளமையின் கனவுகளை துறந்து
வாழ்வின் வசந்தங்களை மறந்த
கார்த்திகை மறவர்களின்
ஈகம் கூறும்
இது கார்த்திகை மாதம்!
வெயலென்று நிழலைத்தேடி ஓடாது
மழையென்று குடையைத்தேடி ஓடாது
தம் சந்திவாழ
எதிர் வரும் பகையின் கதைமுடித்து
காவியமான கரிகாலன் வளர்த்த
அக்கினிக் குஞ்சுகளின்
தியாகம் போற்றும்
இது கார்த்திகை மாதம்!
இரவு பகல் கண்துஞ்சாது
சுடுகுழல் வழியே பகைமுடித்து
விடுதலைக்கு பலம் சேர்த்த
வீரத்தின் முத்துக்களின்
நாமம் சுமந்து வரும்
இது கார்த்திகை மாதம்!
வெஞ்சமரில் களமாடி
வந்த பகை முன்நின்று வெற்றி வாகைசூடி
கல்லறையில் துயிலும்
காவியங்களின்
நினைவுகளை தாங்கி நிற்க்கும்
இது கார்த்திகை மாதம்
எம் தேசத்தின் எழுச்சிமாதம்!
வரலாற்றின் புனிதம் நிறைந்த மாதம்!
கார்த்திகை மாதம்!
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.