நீ இடித்தது எங்கள் நினைவிடத்தை தான்
தமிழர் நம் வீரத்தை அல்ல……………
பயம் கொண்டு வாழ்கிறது
சிங்களதேசம்
தமிழர் நம் வீரம் கண்டு
பட்டதுயரினில் நாம்
படிப்பினைகள் பல பெற்றோம்
பகைமையை கறுவறுக்க – இன்று
படையாக உள்ளோம்
பெரும் பலமாக உள்ளோம்
வா….. வா……. உன்னை கொல்லாமல்
தூக்கமில்லை கண்ணில்
வெல்லாது போனால் – எக்கு
காலையும் இல்லை
நாளையும் இல்லை
எம் இனம் சுமந்த வலிகளை
கண்ணணீர்விட்டு கரைத்திட
இருந்தது ஒரு ஆறுதல்
இன்று அதுவும் இல்லையென்றானது
உன்னாலே பகையே
என்னசெய்தது உன்னை
எங்கள் உறவுகளின் உறைவிடம்
பயந்து போகிறாய் தினமும்
எங்ள் தியாகத்தைக் கண்டு
வியந்து போகிறாய்
பகையே……!!
கொத்துக்குண்டுகள் போட்டு
கொன்றது போதாதென்றா – எம்
வலிகள் தாங்கிய
வரலாற்றுச் சின்னத்தை
இனவெறி கொண்டு இடித்தாய்
நீ …!! இடித்தது
எங்கள் நினைவிடத்தை தான்
தமிழர் நம் வீரத்தை அல்ல
மாறாத எங்கள்
இலட்சியக் கனவை அல்ல.
கவியாக்கம் : நாகதேவன் தமிழீழம்.