குருதி வடிந்த தேசம்
அலையாடும் கடலின் கரையில்
வீழ்ந்தது பிணங்கள்
ஆகாயம் தொட ஒலித்தது
மரண அவலத்தின் ஓலங்கள்
கரும் புகை சூழ்ந்தது தேசம்
கருகியே போனது நாம்
குடிசை அமைத்து வாழ்ந்த
ஒற்றை மரத்தடி
குண்டருத்த உடல்கள்
கொத்து கொத்தாய் மடிந்த உயிர்கள்
குருதி வடிந்த தேசம்
எண்ணில் அடங்காத துயரம்
ஒருபிடி உணவின்றி மடிந்தது உயிர்கள்
ஒய்வு தேடி அலைந்தோம்
உயிரற்று ஓய்வாய் போனது உடல்கள்
கண்ணீர் நதியில் கரை
தேடிய ஓடங்கள்
கழுகுகளின் பார்வையில்
இரையாகிப்போன அவலங்கள்
துடி துடித்த மாண்ட உயிர்கள்
நேரில் கண்டா காட்ச்சிகள்
என்றும் எம் நெஞ்சைவிட்டகலா சோகங்கள்
பதுங்கு குழிகளும் புதைகுழியானது
உலகங்கள் கூடியே எம்மை அழித்தது
தமிழனை கொன்று மண்ணோடு புதைத்து
எங்களின் கண்ணீர் கண்டுமே சிரித்தது
உடல் பட்ட காயங்கள் ஆற்றிட மருந்துகளில்
கவனிப்பார் யாருமில்லை
போர் கொண்டு ஆடிய தேசம்
பிணமாகி வீழ்ந்தது எம் தமிழ் உடல்கள்
வான் வந்து தேடிய கழுகுகள்
வாழ்விடம் தேடியே போட்டது குண்டுகள்
பூக்களும் உதிர்ந்தது காய்களும் உதிர்ந்தது
கண்ணீரிலும் செங்குருதியிலும்
எம் தேசம் நனைந்தது
இன்னும் நீதி கிடைக்கவில்லை
காலம் நீதி தருமா
காயங்கள் தான் ஆறுமா
வரலாறு தந்த பாடம்
தமிழனின் தலைவிதி ஒருநாள் மாறும்
துரோகத்தின் வாழ்வு வீழும்
இருண்ட நீதி ஒரு நாள் விடியும்
நீதி தேவதையின் கண்கள் திறக்கும்
தமிழனின் வரலாறு உலகங்கள்
யாவும் பரவும் என்றும்
எங்கள் தமிழ் ஆளும்
சிவா TE