நசுக்கப்பட்ட கொடியதோர் நாளில்
நிச்சயமாக நாங்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்டோம்
ஒரு சுபிட்சமான
வாழ்விலிருந்து
புறக்கணிப்பிற்குப் பின்னாளில்
ஏற்றுக்கொள்ளப்பட்டோம்
விசாலமான வழிகளிலிருந்து
தூக்கியெறியப்பட்டோம்
பெரும் உருவப் பூச்சிகளால்
நசுக்கிவிடப்பட்டிருந்தோம்
நிசப்த இருளொன்றில்
எங்குளுக்கிருந்த எதிர்காலம்
கொள்ளையடிக்கப்பட்டது
பறவைகளின்
சிறகிலிருந்தே பறிக்கப்பட்டது
எங்களிக்கிருந்த சுதந்திரம்.
மரங்களின்
வேர்களிலிருந்தே எடுக்கப்பட்டது
எங்களுக்காயிருந்த உரிமை.
எங்கள் விதை நிலங்களில்
ஆத்மாக்களின் குரல்
புதிய பாடலை
ஒலியெழுப்பிக் கொள்கின்றன.
ஆம் நிச்சயமாக நாங்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்டோம்
உணர்வுகள் உரிமைகள்
உடமைகள் உறவுகள்
இவைகளை இழந்தவர்களாய்
நாங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டோம்
(எங்களுக்காய் நாங்கள் எழுதிய
வலியின் பாடலில் ஒரு பகுதி நாங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்)
வன்னியூர் கிறுக்கன்