சன்னம் துளைத்த சனம்
***************************
ஏரோடி நெற் குவித்து
சீரோடு வாழ்ந்த இனம்
போராடி புகழ் நிலைத்து
தேரோட இருந்த சனம்
நிலவோடு கதை அளந்து
நிமிர்வோடு இருந்த இனம்
பகையோடு தினம் மோதி
பலமோடு இருந்த சனம்
அழகோடு அறிவாகி
அடங்காத எங்கள் இனம்
வளமோடு வரமாகி
வரலாறாய் இருந்த சனம்
தலையோடு தளபதிகள்
தகமைக்கு வாய்த்த இனம்
விலைபோகா வீரத்தை
விதைத்தது எங்கள் சனம்
போரியலில் திறம் கொண்டு
பொங்கியது எங்கள் இனம்
சீறியதால் நூறு சன்னம்
வாங்கியது எங்கள் சனம்
நிலை மாறித் தலை குனிய
வேதனை கொள்கின்றோம்
தலை வந்து தமிழ் வாழ்வை
தாங்கிட கெஞ்சுகின்றோம்
நிலை மாறும் தமிழ் வாழ்வு
நிச்சயம் தெளிவு கொள்ளும்
விலை போகாத் திறம் கொண்டு
வெற்றிக்கு வழி சமைக்கும்…..
….கவிப்புயல் சரண்….