என் உயிர்த் தோழா ….
கார்த்திகை வந்துவிட்டால் …
என் கண்கள் உன்னைத் தேடுதடா …..
பார்த்திடும் முகங்களெல்லாம் …
உன் போல்த்தானே தெரியுதடா …..
மூடிய பேளைக்குள்ளே…
நீ புதைந்த இடம் தேடுகிறேன் ….
வாடிய முகத்துடனே..
உன் வரவுக்காய் காத்திருக்கேன் …
மறுமுறை கண்டிடவே….
உன் கல்லறையை நாடுகிறேன் ….
நிசப்தத்தைக் கலைக்காமல் …
உன் விழி காணக் கரைகின்றேன் ….
உன் சின்னச் சின்ன குறும்புகளும்…
என் சிந்தை விட்டு மறையலடா….
உன் பொய்யான கோபங்களும்….
என் நெஞ்சம் இன்னும் மறக்கலடா….
நீ பேசிய வீர மொழியெல்லாம் …
நினைவில் வந்து போகுதடா ….
நீ பாடிய தேசப் பாட்டெல்லாம் …
காதில் வந்து கேக்குதடா …
அண்ணன் முகம் நேரில் கண்டு…
கந்தகத்தை நீ சுமந்தாய் …
ஈழ தேச விடியலுக்காய் ..
உன் உயிரால் பகை அழித்தாய் ….
காயங்கள் ஆறவில்லை
ரணங்களாய் கொதிக்குதடா …
மீண்டெழும் தேசத்துக்காய் …
உயிர் விதைகள் முளைக்குதடா ….
ஈழ நினைவுகளோடு …
எஸ்.றதன் கார்த்திகா.