வேதனையின் உச்சியில்..!
2009..
மே 18 இது
முள்ளிவாய்க்காலில்
தமிழுக்கு கொள்ளி
வைத்த நாள்.
சோகத்தை சொல்லியழ
வார்த்தைகளே இல்லை
இதை சொல்லாமல்
நாமிருந்தால்
தமிழர்களே இல்லை.
அன்று..
கல்லும் கூட கரைந்தது
கடலும் கூட அழுதது
முள்ளிவாய்க் கால்
எரிந்தது-உலகம்
முதளைக் கண்ணீர்
வடித்தது.
முப்பது வருடமாய் நடந்தது
முதலில் அகிம்சை தோற்றது
இப்புவி தன்னில் தமிழுக்கு-ஒரு
இருக்க இடம்தான் கேட்டது.
அப்பாவித் தமிழரைக்
குவித்து வைத்து
அகிலத்தில் சிலநாட்டை
சேர்த்து வைத்து
ஆயுதகுண்டாலே
கொட்டித்தீர்த்து
அழித்தாயே வீரனா?
நீயே சொல்லு.
பச்சிளம் பாலக
குஞ்சுகள் ஒரு பக்கம்
பருவமடைந்த
பிள்ளைகள் ஒருபக்கம்
நோயால் வருந்திய
நோயாளர் ஒருபக்கம்
நொந்துபோன
ஆச்சியப்பு ஒருபக்கம்
பட்டணியோடு ஒருபக்கம்
குழந்தைகள்-தாய்
பாலின்றி தவித்தது
ஒருபக்கம்
செத்துக்கிடந்தோர்
ஒருபக்கம்-மன
சிந்தை இழந்தோர்
ஒருபக்கம்
வெற்று வயிறோடு
ஒருபக்கம்-பல
வேதனைகொண்டு ஒருபக்கம்
கற்பிணித் தாய்கள்
ஒருபக்கம்.
கதியின்றித் தவித்தோர்
ஒருபக்கம்.
இரத்தத்தில் குளித்தோர்
ஒருபக்கம்
இராத்திரி பகல் தெரியா
ஒருபக்கம்
ஐயோ..
குடல் அறுந்தவர்
ஒருபக்கம்
கும்பிட்டுக் கிடந்தவர்
ஒருபக்கம்
கை,கால் இழந்தவர்
ஒருபக்கம்
கண் முளி பிதுங்கியோர்
ஒருபக்கம்.
இப்படி
எட்டுத் திசையும்
கத்திக் கத்தியே செத்து
மடிந்தது எம்மினம்
செந்நிறமானது-எம்
நிலம்.
புத்தர் கண்ணிலும்
இரத்தம் வடிந்தது
அவர் போதனைகூட
காற்றில் பறந்தது.
வெற்றி,வெற்றியென
கோஷம் எழுப்பினார்
இந்த..
வேதனையனைத்தும்
திரும்பவும் அவர்க்கே.
-பசுவூர்க்கோபி-