அந்த நாளை…
………………
முட்கம்பி
வேலிக்குள்
இப் பிஞ்சுகளின்
வாழ்க்கை முடக்கம்..
விழிகளில்
ஏக்கம்.
நாவறண்டு
தாகம்.
குரல் இழந்த
சோகம்.
எக்கணத்திலும்
சாவு
விருந்தாகும்.
என்பதே தீர்வு..
திறந்த வெளி
சிறைச் சாலை
குஞ்சுகளுக்கு
ஏது புரிந்திருக்கும்?
ஓடிக் கொண்டே
இருந்தார்கள்.
முள்ளி வாய்க்கால்
வரை ஓடினார்கள்..
முடிவுக்கு
மூடு விழா
ஓட இடமின்றி
ஓரிடத்தில் சரண்.
பயம்
என்ற பயனற்ற
சொல்லுக்கு
அபயமானார்கள்.
கோரம் நிகழ்ந்த
முள்ளி வாய்க்கால்
மறக்க முடியுமா?
Suga rama
16.05.2021