இரத்தத்தால் காவியம் எழுதிய இனம்
இரத்தத்தால் காவியம்
எழுதிய இனம்
கண்ணீரில் தத்தளித்து
கரை சேர முடியாமல்
மண்ணோடு மடிந்த இனம்
ஒற்றை இனத்தை
உலகங்கள் சேர்ந்து
கொன்று குவித்தது
வற்றாத நயில் நதியாய்
கண்ணீர் ஊர்றேடுத்தது
துன்பங்கள் சுமந்த இனம்
துயரங்களோடு மடிந்தது
விடிகின்ற பொழுதெல்லாம்
உயிர்களும் மடிந்தது
கண்கள் மூடியே உலகம் கிடந்தது
எம்மை காத்திட கருணை இன்றியே
கூடிச்சிரித்தது
அம்பு பட்டு துடித்த மானாக
குண்டு பட்டு துடுத்தோம் குத்துயிராக
எம்மை கொள்ள எரி குண்டுகள்
எங்கள் மண்ணில் பல
துரோக வரலாறுகள்
ஏந்திய ஆயுதங்கள்
மெளனம் காக்கவில்லை
எங்களை கொள்ள சற்றும் சளைக்கவில்லை
உயிர் மரித்தோம் அந்த கடலின் கரையில்
வேட்டொலி சாதத்தில்
தேசம் தவித்தது
வேடிக்கை பார்த்த உலகெம்மை
கொன்று குவிக்க குண்டுகள் கொடுத்தது
கண்ணீர் விட்டும் அழுதோம்
கதறியும் துடித்தோம்
காவியுடை புத்தனின் காவாலிகள்
எங்கள் பெண்களின் உடலை சிதைத்தது
எத்தனை உயிர் பலிகள்
அத்தனையும் எங்கள் தேச விடுதலையில்
எத்தனை வலிகளை சுமந்து
எங்கள் முள்ளி கடற்கரையில்
சிவா TE