எப்படி மறப்பது ஒரு யொக்கு கஞ்சிக்காய் வரிசையில் நின்றதை…..
எப்படி மறப்பது..
ஒரு யொக்கு கஞ்சிக்காய்..
வரிசையில் நின்றதை…
எப்படி மறப்பது..
சீறிப்பாயும் ரவுண்ஸ்க்குள்ளே
எங்கள் சீவியம் நடந்ததை..
எப்படி மறப்பது..
விழுத்து வெடிக்கும் எறிகணைகளில்
சிதறிக்கிடந்த உடலங்களை…
எப்படி மறப்பது..
குருதியால் சிவந்திருந்த…
முள்ளிவாய்க்கால் மண்ணை…
எப்படி மறப்பது…
மண்ணுக்குள் மாண்டுபோன
உறவுகளை..
எப்படி மறப்பது…
தேசமே அழிந்து கொண்டிருந்த
நாட்களை..
எப்படி மறப்பது..
சாவு கொண்டு தமிழன் எழுதிய
சரித்திரமொன்றை..
எப்படி மறப்பது…
கூடு சிதைந்த பறவைகளாய்..
அலைந்த காலங்களை..
எப்படி மறப்பது…
தேசம் காத்த தெய்வங்கள்..
தொலைந்தே போனதை…
எப்படி மறப்பது..
இனவெறி அரக்கர்களின்
கொலைவெறித் தாக்குதல்களை…
மறக்கத் தான் முடியுமா??
மன்னிக்கத்தான் முடியுமா??
ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்..
ரணங்களும் வலிகளும் எப்போதும்…
கொதித்துக் கொண்டு தானிருக்கும்…
-நிறஞ்சன்-