கடக்க முடியுமா…..?
******************
இம்மாதம்….
குறுகிய நிலப்பரப்புக்குள்
பல இலட்சம் மக்களை
அடிப்படை வசதிகளற்ற ஏதிலிகளாக்கி….
பல நாடுகள் ஒன்றிணைவுடன்….
மனிதப்பேரவலம் நிகழ்த்தப்பட்டபோது…..
வாய்மூடி மெளனிகளாய்
வேடிக்கை பார்த்த சர்வதேசமே…..!
இன்றல்ல….
என்றும்
எம்
ஆழ்மனங்களில் நீங்கள் இழைத்த-அநீதி
மாறாத வடுவாய் பதிந்திருக்கும்…….
எழில் மிகுந்த எம்
வன்னி மண் சுடுகாடாய் போனகாலம்
கடக்க முடியுமா….??
து.திலக்,
04.05.2021,
15:21.