ஏன் இழந்தோம் உரிமையை..!
கண் விழித்து பார்த்தேன்
கானகம் எரிகிறது காலம் முடிந்து விட்டதா
என்று நினைக்க மனம் ஏங்கிறது ஆலயங்களில்
வரிசை அன்னம் வாங்குவதற்கு அகிலம் எங்கும்
வரிசை எதற்கு…..!
மான்புமிகு பெரியார்களின் இறப்பும்
மானம் சூடிய பெண்மணிகளின் இறப்பும்
மழலை பிறந்து மண் வாசனை மணக்க முன்பே
குருதியில் மிதந்தார்களே என்ன கொடுமை
எதற்கு இந்த நிலைமை…!
மானிடமே அழிய மானிடமே காரணமாயிற்றே
கண்கொள்ளா காட்சி அன்று கண் முன்னே கதறல்
முகம் காலடியில் இறந்த பிணம் மரணம் கூட
மயானத்தில் இல்லையே அந்த மானிடர்க்கு
ஏன் இழந்தோம் உரிமையை..!
சு.லக்ஸன்