குருதி ஓட்டமும் நிற்கவில்லை குழந்தை அலறலும் நிற்கவில்லை ….!
காலம் கடந்தும் கை கால் இழந்தும்
என் நினைவுகளில் முள்ளிவாய்க்கால்
ஞாபகமே குருதி ஓட்டமும் நிற்கவில்லை
குழந்தை அலறலும் நிற்கவில்லை ….!
ஆழிக்கடல் பெருக்கெடுத்து சுனாமி வந்தது
அன்று மக்கள் அமைதியானதால் உருவானதே
குருதி கடல் குருதி பருகி குழந்தையை வளர்த்தார்களே
எம் தாய். அவர்களின் தசையை ஈனர்களுக்கு
உணவாக கொடுத்து எமக்கு உயிர் கொடுத்தார்களே…!
இன்று நான் உயிர் வாழ என் அன்னையே
காரணம் அன்னை போல் இறைவனை நான்
நினைத்ததில்லை இறைவனே என் அன்னையாக
நினைக்கிறேன்…!
சு.லக்ஸன்