அழுது புரண்ட கண்களும் அகிம்சையான ஆண்களும்….!
அழுது புரண்ட கண்களும்
அகிம்சையான ஆண்களும்
கோளையான நெஞ்சங்களும்
கொடிய மிருகங்களால்
துண்டிக்கபட்டதே அன்று……..!!!!!
முல்லை போல் சிரிப்பழகி
சிறு பிள்ளை போல் இதமானவள்
கரும் மேகம் அவள் கண் இமைகளில்
காட்சியளிக்கும் அவள் மேனி வாழை
மரம் அவள் உரைத்தாள் தேனருவி கொட்டும் தினம் – காதலித்தேன்
அவள் உணர்வுகளை காணவில்லையே
இன்று என் கார்த்திகையை – கதறல் சத்தம்
தீண்டுகிறதே என் காதருகில் அழித்து விட்டீரே என் புன்னகையை தனித்து நிற்கிறேனே பனை மரமாய் பாறையாகிறேனே அவள் இன்றி…..!!!!
வானருவி வரும் வையகத்தில் குருதி அருவியாய் கொட்டுகிறதே என் கார்த்திகையின் உடல் சிதறுண்டு கிடக்கிறதே என் உயிர் அவளுக்காகவே
நெஞ்சில் தோட்டா ஏந்துகிறேன்…..!!!!
-லக்ஸன்-