வரிகள் வரும் நாளே திருநாள்
மற்றெல்லாம் கரி நாளே கரி நாள்…!
பொங்குமா கடலின் ஓரம்
பிறந்த நம் இனத்து வீரம்
மங்குமா அன்றி மயங்குமா
மாற்றான் கால் நக்குமோ
அன்றி நலியுமா
கங்குல் விலக எங்கள்
காரிருள் அகன்று போக
செந்தமிழ் ஈழத் திசை
எல்லாம் நின்று ஆழ
வெங்களம் வென்று வந்த
வேங்கைகள் மண்ணில் என்று
மீண்டுமோர் வரிகள் தங்குமோ
அந்த நாள் அன்நாள்ஒன்றே
திரு நாள் அடுத்த நாள் எல்லாம் கரி நாள்
பேரினத்தின் ஆதிக்க சுதந்திரத்தை
கறுப்பாக்கி கரைய வைப்போம்
நாதியற்ற நம்மினத்தை நாமே
காத்து நிற்போம் ..
கவிப்புயல் சரண்