முள்ளிவாய்க்கால் பெரும் வலி…
பூவா? பிஞ்சா? என
பிரித்தறியும் முன்பே
மூர்க்க முனைகொண்டு
முகர்ந்திளைக்கும்
முடிவற்ற தேசத்தில்…..
முற்றத்து மலர்கள் பல
மொட்டு விரியுமுன்னே
அடியிழந்து போனதை
முள்ளிவாய்க்கால் மண்
பெரும் வலியோடு என்றும் கூறிடுமே…
நி.கண்ணன் கமுதி
Share this: