2009 விரோதி ஆண்டின்
மே-மாதம்…..
ஊரூராய் உயிர்குடித்த
பெரும் போரின் மாதமிது…
உலக வல்லரசுகள் துணையுடன்
அவர் தம் பலமுடன்
எதிரிபடைகள் குண்டுமாரி பொழிந்த மாதமிது….
ஆண்டுகள் எத்தனையோ
அத்தனையும் இந்த மாதம் நினைவிருக்கும்……
ஆடம்பரமில்லாது சிரம்தாழ்த்தி நிற்போம்
எம் உறவுகளின் ஆத்மாக்கள் நிலைபெற…..
எம்மை சூழ்ந்த அவலங்கள் தீராது
இனி எப்போதும்
எம் உறவுகளின் நினைவுகளும்
எம்மைவிட்டு நீங்காது….
து.திலக்,
10.05.2021
21:08