காக்கும் கடவுளை
வென்ற கந்தகப்புகை….
வெந்தணலில் தீய்ந்து
வேலியிலே காய்ந்து
நொந்ததடா வாழ்வு…
பிணக்காடுகளில் தோய்ந்து
உயிர் காத்து ஓய்ந்து
சிதைந்ததடா வாழ்வு…
ஆற்றலுள்ள மனிதம்
அழிந்திடாது என்றும்
ஆக்கவல்ல திறனை
ஆக்கிடுமே நின்று….
நேற்றுப்போல் உண்டு
சிதைபட்ட வாழ்வு
நேயமாய் நின்று
நினைந்திடுவோம் என்றும்,
தே.பிரியன்