வெங்களத்தில் நெருப்பாய் நில்லு….!
அஞ்சும் நிலை கலைத்து
ஆண்மை தனை பெருக்கி
ஆற்றல் மிகு தலைமை
ஏற்ற புலிப்படையாய்
எங்கள் களமுனைகள்
எகிறத் தொடங்கியது
எங்கும் எறிகணைகள்
எதிலும் சதைத் துகள்கள்
பொங்கிப் பறந்து வரும்
பொஸ்பரஸ் புகை நெடிகள்
வெங்களங்கள் எல்லாமே
வெறி கொண்டு ஆடியது
தங்கத் தலைவனவன்
தளராத தளபதிகள்
தகையுடைய போராளிகள்
தாய் நிலத்தை மீட்க எண்ணி
நஞ்சைக் கழுத்தேந்தி
நர்த்தனமே ஆடி நின்றோம்
செங்களம் எல்லாமே
சிதைந்த உடல்கள் அன்றோ
சீறிய குருதி வெள்ளம்
பீறிட்டு ஓடியதே
நாறிய உடல்கள் எல்லாம்
நாய்கள் உண்பதற்கே
கற்றை கற்றை எனக்
கண்ட உடலை எல்லாம்
ஒற்றை வரியதனில்
ஒப்புவிக்க முடியாது
உண்மை ஒரு நாளில்
உறங்கிக் கிடக்காது
கொற்றப் போர் தொடுக்க
கொடுவில் களம் ஏந்தி
உற்றதலைவன் படை
கூற்றாகும் எதிரிக்கு
ஆற்றை நாள் வரைக்கும்
அழுது தேற்றிக் கொள்ளு…
..கவிப்புயல் சரண்….