தலைமுறைக்கு
எழுச்சி ஊட்டுவோம்
யாரை நம்பி நாம் பிறந்தோம் ஏனோ அழுகிறாய்
முள்ளி வாய்க்கால் முடிவு அல்ல தொடக்கம் எழும்புவாய்
தேரை தள்ளி தெருவில் விட்ட
கதையைப் போலவே
நாம் ஊரை விட்டு ஓடி வந்தோம்
அகதி ஆகவே
வெல்லும் வரை வேங்கை வழி கூட நின்றோமா
இல்லை வீட்டுக்கொன்று கேட்ட போது
சேர்ந்து நின்றோமா
தொல்லை வந்து சூழும் போது
எல்லை நின்றோமா
புலம் கடந்தும் உழைப்பு யாவும்
புலிக்கு தந்தோமா
கொடுத்தோம் என்று சொல்லி விட
உள்ளோர் சில பேரே
ஆனால் அழுது கொள்ளும்
அத்தனையும் நடிப்பில் வந்தோரே
ஈழம் தன்னில் போரை ஆட
வந்தோர் நூறில் எழுபது
புலம் கடந்து பணங்கள்
தந்தோர் நூறில் ஐம்பது
கொடுத்த விலை கொஞ்சம் இல்லை
நொந்து சாகிறோம் ஏனோ
கொண்ட கொள்கை மாறவில்லை
கொடுமை வேகிறோம்
அண்டை வீட்டில் கொன்றவர்கள்
உண்டு போகிறார்
எம் தொண்டை மட்டும் குரல்கள் வந்தும்
ஏன் அடங்கிப் போகுது
வென்றவனை வாழ்த்தி நூறு பாடல் பாடியே
வெங்களத்தை மறந்து விட்டு ஆட்டம் ஆடியே
கண்டதில்லை நாயே . பெரும் சொர்க்கம் ஒன்றையும்
நீ சேர்த்து வைத்த காசு பணம் சொத்து எல்லாம் கானல் நீர்களே
சிங்களத்தோன் எம் தமிழை கூறு போடுவான்
கையை கட்டி வாயை பொத்தி இவன் சேர்ந்து ஆடுவான்
சேர்ந்திடுவான் படைகளுடன் கூத்து போடவே
ஆனால் வந்திடுவான் முள்ளிவாய்க்கால் வெறும் மூக்கு சீறவே
கொண்ட விலை கொடுத்த தலை என கூச்சல் முகநூலில்
ஆனால் கடைசியாக உண்ட சோறு பகையுடன் தான் இருக்கும் சில பேரில்
வெற்று வார்த்தை பேசி பேசி வீணே நடிக்கிறார்
அவர் உற்று நோக்கில் பச்சை உடை அணிந்தே இருக்கிறார்
முட்டுகொடுக்க முள்ளிவாய்க்கால் சரிந்து விடவில்லை
மூடி கொண்டே நடையை கட்டும்
உன் முகமே சரியில்லை
கொள்கை தன்னை விட்டு விட்டு
கொடி பிடிக்கிறாய்
உன் கோவணங்கள் கிழிந்து போக
கோஷம் போடுறாய்
காசை கண்டு ஆசைப்பட்டு காலை நக்கினாய்
தூசைப் போலே தேச மண்ணை
ஏனோ விற்கிறாய்
சொல்லி வைப்போம் ஒற்றைப்பிடி மண்ணிலும் வீரம் உண்டடா
தள்ளி வைக்கும் உன்னை எங்கள்
வீரத்தாய் நிலத்தின் மண்ணடா
துள்ளி வரும் எங்கள் காலம்
மீண்டும் ஆளுவோம்
அன்று உன்னை அள்ளி வந்து
கொள்ளி போடுவோம்
அழுத கண்ணீர் அத்தனைக்கும்
பதில் எழுதுவோம்
விழுந்த நிலம் எழுந்து கொள்ள
வலிமை சேர்க்குவோம்
அனைவருமே ஒன்று கொள்வோம் முள்ளிவாய்க்காலில்
அத்தனையும் அள்ளி வைப்போம்
புனித வேள்வியில்
துக்க நாட்கள் என்று சொல்லி
பின்னே நிற்காது
சொல்லி கொள்வோம் தலைமுறைக்கு
எழுச்சி ஊட்டுவோம்
கவிப்புயல் சரண்..