வலி சுமந்த என் தமிழீழ மண்………..
கனவுகள் சுமந்து
கார்த்திகை மைந்தரின்
அரவணைப்பில் வாழ்ந்திருந்தோம்
இலட்சியம் வெல்ல
சுடுகலன் கொண்டு
இனம் காத்து மகிழ்ந்திருத்தோம்
வாகரையில் தொங்கினோம்
வன்னிக்காடுகளால் பதுங்கினோம்
மன்னாரின் முன்னரங்குகளை
தாண்டியும் பயணித்தோம்
முகமாலை பெரும்சுவர்
தகர்த்தது பெரும்சமர்
கிளிநகர் பறிபோனது
எனினும் நாங்கள் தளர்ந்திடவில்லை
முல்லைமண் நோக்கி
எங்கள் கனவுளுடன்
வீறுநடை கொண்டோம்
ஆனந்தபுரத்து பெரும்புயல்
அண்ணனின் ஆற்றல் கொள்
வீரத்தளபதிகள் தீரமுடன் களமாடினர்
துரோகிகளின் காட்டிக்கொடுப்புக்களும்
நரிகளின் நயஞ்சகமும்
தோற்றுப் போனது
எங்கள் தலைவனின்
சேனையின் தியாகத்தின் முன்
மண்டியிட்டு வீழ்ந்தது
அணையாமல் இன்னும் எரிகிறது
ஆனந்தபுரத்து பெருநெருப்பு
மேற்கத்தைய முதலைகளும்
இந்தியக் கோட்டான்களும்
வெள்ளையனின் வால்பிடிகளும்
கூட்டாக கைகோர்த்து
தமிழனைக் கொன்று குவித்தநாள்
மே 18.
மறந்துபோகுமா எங்கள் வலிகள்
மறைந்துபோகுமா எங்கள் ரணங்கள்.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.