ஒரு புள்ளியில் தொடங்கியது
முள்ளியில் முடியுமென
எண்ணியிருக்கவில்லை..
தம்பிதான் விடிவெள்ளி என
நம்பிவந்த சனமும் முள்ளியில்தான்
முடக்கியது..
மொத்தமும் ஒரு புள்ளியில்
சுருக்கியதால் கொள்ளியிட
வசதியாய் போனது..
வேழங்கள் தூக்கி சுமந்த ஈழம்
முள்ளியின் வாய்க்கால் சற்று அகண்டிருந்தமையால் ஆழப்புதையுண்டது..
வெள்ளி முளைக்குமென பிள்ளைகளை கொடுத்த தாய்மாரும்
முள்ளியில் முடிந்தது கண்டு மூலையில் முடக்கினர்..
அன்னைக்கோர் தினமுண்டு
தந்தைக்கோர் தினமுண்டு
காதலுக்கும் தினமுண்டு
சாப்பாட்டிற்கும் தினமுண்டு
சாதலுக்கோர் தினமில்லையேயென்ற
ஏக்கம் முள்ளியில் முற்றுபெற்றது..
புலிக்கு பல்லை பிடிங்கி பூனையாக்கிவிட்டோம் பிறகென்ன
முள்ளிவாய்க்கால் நினைவாமென
ஏளன சிரிப்பாம் எள்ளி நகைப்பாம்..
அவனுக்கு முள்ளிவாய்க்கால் முடிவு
விடிவெள்ளி வாய்க்காமல் நமக்கேது ஓய்வு.
புலிகளின்_தாகம்_தமிழீழ_தாயகம்.
பிரபாசெழியன்.