வஞ்சம் வைத்த நெஞ்சம் சுமப்போம்…!
வாழ ஒரு நாடு கேட்டோம்
வந்து விழுந்ததோ ஒரு இடி
வல்லாதிக்க நாடுகள் என்ற பெயரில்
குருதிகளால் நிறைந்ததே எம் மண்
கொத்து குண்டுகளின் கோர பசிக்கு
வஞ்சம் வைத்து அழித்தனரே எம்மை
வல்வெட்டியின் வீரனால் வாழ்ந்தோம்
ஐ நாவும் அங்கீகரிக்கும் என்று இருந்தோம்
ஆண்டவனும் கை விட்டான் எம்மை
நரி தோல் போர்த்திய சிங்கம் எமை வேட்டையாடியதை கண்டு
குடிக்கும் நீரும் உப்பாகியது எம் கண்ணீரால்
புத்த தேசம் அல்ல அது
எம் குருதி குடித்த ஓநாய்களின் தேசம்
அந்நிய தேசம் என்று பாரத தேசமும் எம் கை விட்டது
கை ஆண்ட தேசம் எமை கை கழுவியது
வஞ்சம் வைத்த நெஞ்சம் சுமப்போம்
எமை அழிவுக்கு காரணமானவர்களை வீழ்த்த,
வல்வெட்டிதுறை நாயகனின் கனவை நனவாக்க
உறங்கட்டும் புலி காலம் வரும் வரை
காத்திருப்போம் காலம் கனியும்
காத்திருக்கும் புலி கண் விழிக்கும்
பறக்கும் புலி கொடி
சோழன் கொற்றவைதேவன்