அன்பை தந்த தாயும் எங்கே தோளில் சுமந்த தந்தை எங்கே…?
அன்பை தந்த தாயும் எங்கே
தோளில் சுமந்த தந்தை எங்கே
இரத்தத்தால் கலந்த பிறப்புக்கள் எங்கே
உயிராய் வாழ்ந்த நண்பர்கள் எங்கே
தேடி நானும் அலைகின்றேன் இங்கே
உங்களை காண துடிக்கின்றேன் நாளும்
ஒளியான வாழ்வில்
இருள் வந்து மறைக்க
நடந்தது தானோ உயிர்களின் தியாகம்
கூடி வாழ்ந்த உறவுகள் நடுவே
அடித்த புயலும்
வாழ்கை அழிக்க
சிதறிக் கிடக்குது உறவுகள் உடலும்
கண்ணீரின் கேள்வி எல்லாம்
ஏன் இந்த பயணம் என்றே
கண்ணீரை சிந்தி தினம்
உறவுகள் நினைவால்
வாடுது மனமும்
விடை காண வாழ்வில்
வீரம் கொண்டே கடக்கின்றேன்
இங்கே
விடுதலையின் நாளே
எப்போது வருவாய்
தூக்கம் இல்லா பொழுதுகள் எல்லாம்
விழிகளின் நீரால் நிரம்பியே வழிய
உயிரில்லா உடலாக நாளும்
நடக்கின்றோம்
உறவுகளே தினம் உங்களை எண்ணி யே
சிந்திடும் கண்ணீர் துளியை
துடைக்க நாதீயுமில்லை
உயிரினம் எல்லாம்
ஒன்றாக திரிய
உங்களை எண்ணியே
எம் மனதும் வலிக்குதே
பாரதி மைந்தன்