உலகாண்ட பெரு வீரம் தீர்ப்பெழுத வருகிறது
இனி எதை எழுத
விழி வழிந்து விழும் நீர்
தொடுதிரையை நனைப்பதையா?
அழுதறியா என் கண்கள்
கண்ணீர் வடிப்பதையா?
கர்ப்பிணி பெண் வயிறு
கிழித்தோனை விடுவதுவா
கல்லோடு மண் தின்ற
காலத்தை மறப்பதுவா
நெல்லாடும் வயல் எல்லாம்
செல் எறிந்தாய் நினைவிருக்கா
உள்ளோடும் குருதி மண்ணில்
உவந்தோமே அறிவிருக்கா
கைக்குழந்தை கால் இரண்டும்
கரையோரம் கிடந்ததுவுவே
கண் இழந்த பச்சை உடல்
நரி நாய்கள் உண்டதுவே
பிள்ளைக்கு பால் இல்லை
தாய் மார்பில் என்ன செய்வோம்
சிலருக்கு மார்பில்லை
நாய் வாழ்வே வாழ்ந்திருந்தோம்
கை உண்டு கால் இல்லை
கண் உண்டு கை இல்லை
தோள் உண்டு தொடை இல்லை
துயர் உண்டு விடிவில்லை
அவலத்தை நீ தந்தால்
அடங்கியே போவோமா
குவலயத்தை ஆண்ட இனம்
குறுகிப் போய் கிடப்போமா
நீறுண்டு வீழும் பார்
நீசர் படைக் குகைகள்
பாறுண்டு போகும் பார்
பகைவர் படையணிகள்
பலகாலம் பொறுக்காது
புலி ஆண்ட பூமி இது
அழகாகக் கரை ஏறும்
அன்னை நில விடுதலையே
அடேய்….பகையே….
சுடுமணலில் உடல் புதைத்தே
எம் உயிர் எடுத்து வந்துள்ளோம்
விடு பகையை என்றாலும்
விடமாட்டோம் விட மாட்டோம்
இருந்து பார் சிங்களமே
நிலம் வெடிக்க போகிறது
திருந்தி நீ வாழ்ந்தாலும் செய்த
பிழை உறுத்தப்போகிறது
உலகாண்ட பெரு மன்னன்
எம் இனத்தின் விடுதலைக்காய்
தேர் ஏறி வருகின்றான்
தேர் ஏறி வருகின்றான்
தேர் ஏறி வருகின்றான்…
….கவிப்புயல் சரண்…