தொடரும் தேடல்கள்………….
முல்லை மண்ணில்
முந்தை நாள் தொலைந்துபோன
எம் பாச உறவுகளைத் தேடுகிறோம்
ஆண்டுகள் பல கடந்த பின்பும்
முகவரியில்லாக் காகிதமாய்
முன்னூறு நாட்க்கள்
தம் கருவில் சுமந்த
பயிர்களைக் காணாது
நாளெல்லாம் அவர்கள்
வரவுக்காய் காத்திருக்கும்
கருவறைகள் தான் எத்தனையோ
காலாற உங்களை தம்
மார் மீதும் தோள் மீதும்
தாங்கி எத்தனையோ
தந்தையரின் தோள்கள்
இன்று உங்களைத் தாங்காததால்
கண்ணீரில் தள்ளாடுகின்றன
மணவறையில் ஒன்றான மணவாளன்
வரவுதனை எண்ணிய படியே
நிஜங்களில் பூவிழந்த பொட்டடிழந்த
நித்தியச் சுமங்களிகளாய்
பூத்திருக்கும் பூங்குழலியர் தான் எத்தனையோ
உடன்பிறந்த உறவுகள்
உடனருகில் இல்லாததால்
மோனாலிசா ஓவியமாய்
உலா வரும் உறவுகள் தான்
எத்தனையோ!!
ஆண்டுகள் பதினொன்று ஆன பின்பும்
முடிவில்லாத் தொடர்கதையாய்
தொடர்கின்றன நம் தேடல்கள்
முகவரியில்லா முகங்களின்
முகவரிகள் கிடைத்திட
யுகங்கள் ஆகுமோ?
இல்லை………….
முகவரிகள் தொலைந்தனவாய்
மண்ணிணுள் புதைந்திடுமோ!!
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.