வலி சுமந்த இனம்
விழியதிலே துளிர் நீரில் குளியலானோம்
வீதி தொடு வீடு வரை விஷத்தாலானோம்
கசத்த அந்த வாழ்க்கையதில் கந்தலானோம்
கார்முகிலும் கனத்தமழை நீரில் வாழ்ந்தோம்
கடு வெகிளும் குளிர் பனியும் காவல் நின்றோம்
கைநழுவி உறவு போக கதியற்றானோம்
எம் காவலது வேர் முறிந்து போகையிலே
ஊர் அதிலே ஒப்பாரி எச்சமானோம்
பார் அதிலே பிணவாடை படர்ந்திருக்க
பதுங்கு குழி அதனுள்ளே பாதியானோம்
நீதியது அற்ற இந்த உலகத்திலே
நிம்மதியின் தார்ப்பரியம் எரியக்கண்டோம்
ஊன் உயிர்கள் ஊசலாடி உறைந்து போக
உடலாலே ஜடமதுவாய் யாகம் கொண்டோம்
படர் சுடரும் பகை வெடியும்
பகலாய்க் கண்டோம்
பார் வேவு விமானமதை தரையில் கண்டோம்
படை திரண்டு அணி கொண்ட தமிழைக்கண்டோம்
இரட்டை வாய்க்கால் இரட்டைவிழி திரளக்கண்டோம்
குறட்டை விட்டு நிம்மதியாய் தூங்கையிலே
கொக்கரிக்கும் சாமச்சேவல் கூவல் கேட்டோம்
அத்தனையும் வலி சுமந்து போனதாலே
ஒற்றைப்பனை மரத்தடியில்
ஒற்றையானோம்
கற்றுணர்ந்த வலிகள் எம்மில் நிறைந்திருக்கு
கற்பித்தோன் காலடியில் அடிமையானோம்
காவு கொண்ட எம் ஒற்றுமையின் சிதறலாலே…….
வரிகள்-✍முல்லைக் கவிஞன் சாரு-
(மு/முத்தையன் கட்டு வலதுகரை மகாவித்தியாலய கலைப்பிரிவு மாணவன் )