“அதைபற்றி கவலைபட வேண்டாம் நீங்கள் கடைசிவரை போராடுங்கள்”
நச்சுக் குண்டுகள்,விமான குண்டுவீச்சு,கொத்து குண்டுகள்,பாஸ்பரஸ் குண்டுகள்,பல்குழல் எறிகணை வீச்சு,டாங்குகளின் ராட்சத குண்டுவீச்சு எல்லாவற்றினதும் மிக மூர்க்கமான அகோரமான தாக்குதல்.
எங்கும் பிணங்கள்,கால் வைக்கும் இடமெல்லாம் சதை சிதறல்கள்,கைதொடும் இடமெல்லாம் குருதியின் ஈரங்கள்,நின்று நிதானிக்கவோ அல்லது யோசிக்கவோ யாராலும் முடியவில்லை.
கதவுகள் அடைக்கபட்ட வீட்டில் தீ பிடித்து பற்றியெரிந்தால் வீட்டினுள்ளில் அகப்பட்டவர்கள் தப்புவதற்காக அலறி துடிப்பார்களே அப்படிதான் சனம் அலறி துடிதுடித்தது.
பிள்ளை இஞ்சவாங்கோ,தம்பி இதை பாருங்கோ,அண்ணா அண்ணா வலி தாங்கமுடியல்ல,ஒன்பது மாத இறந்த குழந்தையை ஆறுவயது சிறுமி என்ர தம்பி மயங்கிட்டான் மருந்து கொடுங்க அக்கா,உங்களை நம்பிதானே வந்தம் இப்படி விட்டுட்டியளே புள்ள, கூக்குரல்கள்,இரைச்சல்கள்,கதறல்கள்,
எங்கு பார்தாலும் அவலம்
எங்கு திரும்பினாலும் கந்தக நெடி,
ஒரு புள்ளியில் குவிந்த மக்கள் செத்து மடிந்தது.
எல்லாத்தையும் இழந்து,சாககொடுத்திட்டு, எல்லாமே முடிஞ்சுபோட்டுது,எல்லாம் சரி, இனியில்லை,இனியார் எங்களுக்காக இருக்கிறார்,இனி என்ன செய்ய போகிறம்,மாவீரர் தியாகம் வீணாய் போட்டுதே,தலைவரை நம்பி வந்தசனமும் அழிஞ்சிட்டுதே இனி வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன ஏறிகணை எம்மார்பையும் துளைக்கட்டும் என்று எழுந்த நடக்க எத்தனித்த போதுதான் அந்தசெய்தி காதில் கேட்டது.
“அதைபற்றி கவலைபட வேண்டாம்”
ஓராயிரம் அர்த்தம் பொதிந்துள்ள ஓர்வாசகம் இது.இதை புரிந்தவர்களுக்கு விளங்கும்.
தாய் நிலத்தை இழந்தும்
இத்தனையாயிரம் போராளிகளை இழந்தும்
தம்பி காப்பாற்றுவார் என்று நம்பி வந்த இத்தனையாயிரம் பொதுமக்களை இழந்தும்
எத்தனையோ பால்மணம் மாறாத பிஞ்சுகளை இழந்தும்
தலைவர் பார்த்து பார்த்து வளர்தெடுத்த இத்தனை தளபதிமார்களை இழந்தும்
இத்தனை ஆயுத வளங்களை இழந்தும்
தலைவர் பார்த்து பார்த்து கட்டமைத்த இத்தனை கட்டமைப்புகளை இழந்தும்
இத்தனை ஆண்டுகாலம் அரும்பாடுபட்டு போராளிகளின் தியாகத்தால் தலைவர் உருவாக்கின தமிழீழ சாம்ராஜ்ஜியத்தை இழந்தும்
அனைத்தையும் இழந்து சூனிய வெளியில் நிர்கதியாய் நிற்கின்றது போது ஆறுதல் படுத்திய வார்த்தை அது.
உயிரை இறுக இறுக்கி பிடித்து வைத்திருக்கும் வார்த்தையும் அது.
#புலிகளின்_தாகம்_தமிழீழ_தாயகம்.
பிரபாசெழியன்.