அன்று கொதித்தது எங்கள் குருதி ………
அன்று நடந்து
கொண்டிருந்தோம் ..
கால்கள் வலித்தது
காலன் சிரித்திட …
வானம் கருத்தது
வயல்கள் சிவந்திட….
உடல்கள் சிதைந்தன
உரத்து காத்திட…
யாரும் வரவில்லை
என்னநடந்தது
எதுவும் புரியல…
மானிடனாய்
மரணம் பிடித்ததை
உண்மை என்பதை
நானும் அறிந்தேன்
அன்று தான் எல்லாம்
நடந்தது ….
இன்று மறந்து நாம்
இருக்க முடியுமா /
இதயம் அதற்கு
இடமும் கொடுக்குமா /
நொந்தது போனதை
மறந்து தொலைத்திடு?
என்று கேட்க்கிறான்
வேற்று இனத்தவன்!
என்ன சொல்வது
என்ன சொல்வது
எந்தன் மடியில்
உடல்துண்டு
விழுந்ததைசொல்லவா
பிஞ்சுகுழந்தைகள்
பிஞ்சு சிதைந்ததை
சொல்லவா
எங்கள் உறவுகள்
கஞ்சிக்கு அலைந்ததை
சொல்லவா!
ஆட்டோவுக்கு
ஒரு தேங்காய்
விலைபோனதை
சொல்லவா!
என்ன விளங்கும்
அவனுக்கு என்ன
விளங்கும்
அன்று கொதித்தது
எங்கள் குருதி
வெந்து தணிந்திடாது
என்பது உறுதி
வலிகளுடன்
தே.பிரியன்